இறுதி 20-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி : தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது!!

330

srilanka

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20-20 போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டுப்லசிஸ் 85 ஓட்டங்களையும் டுமினி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக மகேல ஜெயவர்தன 33 ஓட்டங்களையும் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் திசார பெரேரா ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற போதும் தென்னாபிரிக்க அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. இன்றைய வெற்றியின் மூலம் இலங்கை அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக டில்ஷானும் தொடரின் நாயகனாக டுமினியும் தெரிவுசெய்யப்பட்டனர்.