வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது தாக்குதல்!!

600

Fight

வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று(29.03) காலை 5.50 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது தனியார் பேரூந்து காப்பாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பேரூந்து நிலையத்தில் கடமை புரிந்த இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது இன்று 29.03.2016 காலை 5.30 மணியளவில் தனியார் பேரூந்தின் ( வவுனியா- யாழ்ப்பாணம் வழி) காப்பாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.