இன்று மாலை வேளையில் நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை!!

673

Rain

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் நிலவும் உஷ்ணமான காலநிலையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என, வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் லலித் சந்திரபால குறிப்பிட்டுள்ளார்.