
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று (29.03.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இவ் ஆணைக்குழு விசாரணைகளுக்கு 311 நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த பொழுதும் 162 நபர்களே ஆணைக்குழுக்கு தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.
நாளைய தினமும் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் விசாரணைக்களுக்காக 218 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.





