எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தினை தடையின்றி முற்று முழுதாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
மின்சார நெருக்கடி தொடர்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை விளக்கமளிக்கும் மாநாடொன்று நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.