ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டைபோட்ட நயன்தாரா–டாப்சி!!

339

aarambam

அஜீத், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ஆரம்பம். ஆர்யா, டாப்சி, ராணா போன்றோரும் நடிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி இடையே போட்டி ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா அதிகம் சம்பளம் கேட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..

ஆரம்பம் படத்தில் நயன்தாராவுக்கும், டாப்சிக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்குள் ஈகோ ஏற்படவில்லை. இருவரும் சண்டை போட்டார்கள் என்பது வதந்திதான். பில்லா படத்தை போல் நயன்தாராவை இதிலும் கவர்ச்சியாக பார்க்கலாம். கவர்ச்சியாக நடிப்பதற்கு அவர் கூடுதல் சம்பளம் கேட்டதாக சொல்வதில் உண்மை இல்லை.

ஆரம்பம் படப்பிடிப்பில் ஆபத்தான சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்தார். மூன்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது கால் இடறி முறிவு ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டாம் என்று தடுத்து விட்டார்.

மும்பை பின்னணி கொண்ட கதையாக இப்படம் தயாராகியுள்ளது. தாதாக்கள் படம் அல்ல. வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும். முக்கிய சமூக பிரச்சினையொன்றும் படத்தில் இருக்கும். சுமா ரங்கநாத் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்பம் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்தோம் என்று அவர் கூறினார்.