நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நடிகராக அவதாரமெடுத்து பின் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் ஆகிய படங்களை இயக்கியவர் பிரபுதேவா. இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தி சினிமாவில் பிசியாக இருக்கும் பிரபுதேவா சென்னையில் அளித்த பேட்டி வருமாறு..
தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதை. இப்படத்தில் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். நான் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. எனது சினிமா படவேலைகள் மும்பையில் இருப்பதால் அதிக நாட்கள் அங்கு இருக்கிறேன். ஆனாலும் சென்னைதான் என் வீடு. என் இரு மகன்கள் சென்னையில் உள்ளனர். இருவரும் அவர்களின் தாயுடன் வசிக்கிறார்கள்.
எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து குழந்தைகளை பார்க்கிறேன். அவர்களுக்கும் நேரம் கிடைக்கும் போது மும்பை வருகிறார்கள். விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்புகள் அமையும் போது படம் எடுப்பேன என்று பிரபுதேவா கூறினார்.