கனடா விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் கைது!!

644

Canada

கனடாவின் வுட்ஸ்டோக் எனும் இடத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற இந்த தீ வைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இவர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்தே கைதாகியுள்ளார்.

இலங்கையில் இருந்து இவர் மீண்டும் கனடாவுக்கு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் ஜெயக்குமார் சண்முகநாதன் என தெரியவந்துள்ளது.