பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டத்ததை வழிநடத்திய இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவர் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா நகரின் மத்தியில் ஏ9 வீதியின் போக்குவரத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பௌத்த மதகுருமார், கலாபேபஸ்வேவ பாடசாலை அதிபர், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் உட்பட ஐவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழங்குபடுத்தியமை மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்டமை ஆகியவற்றின் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்கள் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்
இவ் வீதி மறிப்பு ஆர்ப்பாட்டம் மூலம் வவுனியா நகர வீதிகள் போக்குவரத்து நெருக்கடியேற்றபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.