மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!!

557

Bridge

இந்தியாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்துள்ளது

இந்தியாவின் கொல்கத்தா நகரில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிர்மாணப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேம்பாலம் தகர்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இரவு இரவாக மீட்புபணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் துப்புரவாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.