வவுனியாவில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!!

572

Water

வவுனியாவில் நேற்று முன்தினம் பிற்பகல் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றபோது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகர் இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த றஞ்சித் றியோன்சன் என்ற 19 வயது பாடசாலை மாணவன் நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றபோது கிணற்றுக்குள் நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். குறித்த மாணவனுக்கு நீச்சல் தெரியவில்லை எனினும் குளிப்பதற்காக கிணற்றுக்குள் சென்றபோது நீரில் மூழ்கிய மாணவனை ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் க.பொ.த உயர்தரம் 2016 பரீட்சைக்குத் தோற்றவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.