
களனி – மகுலுகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் களனி – சிங்காரமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





