ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம் வெறும் வதந்தியே!!

532

AR

பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இலங்கையில் நடைபெற இருந்த மாபெரும் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்த்தரும் சந்தைப்படுத்தல் முகாமையாளருமான டபிள்யு.விஜேந்திரன் தெரிவித்தார்.

ஒஸ்கார் நாயகன் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்படவுள்ள நிலையில் அவரது வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இந்தியாவில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையிலும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு விடுமுறையாகையால் இதற்குத் தேவையான வேலைப்பாடுகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க சந்தர்ப்பம் இல்லாத பட்சத்திலேயே இந்நிகழ்ச்சி சற்று பிற்போடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

புதுவருடப்பிறப்பின் காரணமாக தற்போது இந்த இசைநிகழ்ச்சிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வேலையாட்களை திரட்டுவதற்கும் சற்று சிரமமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.