தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

424

dravid

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக உள்ளார். இத்தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, டிராவிட் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டனர்.

இது குறித்து டிராவிட் கூறுகையில் ஐ.பி.எல் தொடர் சூதாட்டத்தினால் ஏற்பட்டுள்ள சூழல் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது. இதனால் கிரிக்கெட் வீரர்களின் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு, மதிப்பு ஆகியவை குறைந்துவிடும்.

இப்போட்டியின் மீது ரசிகர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு வாரியம் அல்லது அரசு என்று யாராக இருந்தாலும் சரி பாகுபாடு பாராமல் உதவ வேண்டும் என்றார்.

தவறான கருத்து:

இந்த பேட்டி குறித்து டிராவிட் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் தெரிவித்த கருத்துக்களை சில ஊடகங்கள் தவறான பொருள்பட வெளியிட்டது ஏமாற்றம் தருகிறது.

நான் குறிப்பிட்ட நம்பகத்தன்மை குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. எனது முழுமையான பேட்டி இன்று வெளியாகிறது. அதுவரை எல்லோரும் பொறுத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.