வவுனியா சைவப்பிரகாச கல்லூரியில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் கௌரவிப்பு!!

326

 
2015 ஆம் ஆண்ட நடைபெற்ற க.பொ.த உயர்தரம் பரீட்சையில் சித்திபெற்று பல்லைகழகத்திற்கு தெரிவான 35 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2016) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பாடசாலை அதிபர் திருமதி கமலேஸ்வரி பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், மற்றும் கலைப்பிரிவில் மாவட்ட ரீதியாக தெரிவான மாணவர்களுக்கு ஒஸ்ரியா நிறுவன உரிமையாளர் திருமதி.சிவஜீவன் வேந்தினி அவர்களால் 25000 ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டதுடன் வர்த்தகர் எஸ்.ஜீவன் அவர்களால் 4 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் பண உதவிகளும் வழங்கப்பட்டது. சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மாணவர்கள் படித்து முன்னேறுவதோடு எமது கலை, கலாச்சாரம் பண்பாடுகளையும் கட்டிக்காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலையில் வாகன தரிப்பிடம் அமைப்பதற்காக இரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி சிவஜீவன் வேந்தினி, சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_0258 IMG_0262 IMG_0263 IMG_0267 IMG_0285 IMG_0292 IMG_0293 IMG_0302