
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெற்கொள்வனவு மேற்கொள்வதில் சில இழுபறி நிலைகள் இருந்து வந்துள்ளது.
தற்போழுது வவுனியா நகரிலுள்ள நெற்களஞ்சியசாலைசாலையிலிருந்து விஷேட அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதையடுத்து விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்ள அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று காலை வவுனியா மாவட்ட கமக்காரர்கள் அமைப்புகள் அரசாங்க அதிபரை சந்தித்து விவசாயிகளின் நிலைமையினை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடார்பு கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
நேற்று காலை பம்பைமடு, கோவில்குளம், ஓமந்தை ஆகிய இடங்களைச் சேர்ந்த விவசாயிகள், கமக்கார அமைப்புக்கள் என சுமார் 50 பேர் சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடப்பட்டதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு களஞ்சியக்காப்பாளரை அழைத்து விவசாயத் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்பட்ட விண்ணப்ப்படிவங்களை பொறுப்பெடுத்து திகதியிடப்பட்டு ஒப்படைக்குமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாகவும் இரண்டு தினங்களுக்குள் இவற்றை செய்து முடித்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கமக்கார அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக அறுவடை செய்யப்பட்ட நெற்களை விற்பனை செய்யமுடியாமல் இழுபறி நிலையிலிருந்த இப்பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், 50கிலோ 500கிராம் நெல்மூட்டையினை 1900 ரூபாவிற்கு விவசாயத்திணைக்களம் பெற்றுக்கொள்ளஉள்ளதாக தெரிவித்தே விண்ணப்பப்படிவம் விநியோகம் செய்யப்பட்டவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





