வவுனியாவில் 23 வருடங்களின் பின்னர் நெல் கொள்வனவு!!

401

 
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரிடமிருந்த நெற்களஞ்சியசாலை கடந்த சில நாட்களுக்கு முன் விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறி நெற்களஞ்சியசாலையினை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர். பின் மீள் திருத்தங்கள் மேற்கொண்டு இன்று (05.04.2016) நெல் களஞ்சியப்படுத்தப்பட்டது.

இன்று காலையிலிருந்து பல வாகனங்களில் நெற்களை விவசாயிகள் நெற்களஞ்சியசாலைக்கு கொண்டுவருவதை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து இந்த நெற்களஞ்சியசாலையினை இராணுவ விஷேட அதிரடிப்படையினர் தமது வசம் வைத்திருந்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

P1200162 P1200163 P1200164 P1200165 P1200166 P1200167 P1200168