வவுனியா பிரஜைகள் குழுவிற்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை : பிரஜைகள் குழுவின் தலைவர்!!

515

P1200175

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் கே.தேவராஜா அவர்களின் ஊடகசந்திப்பு இன்று (05.04.2016) காலை 11.30 மணியளில் வவுனியா வாடி வீடு மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்..

வவுனியா மாவட்டத்தில் 2009ற்க்குப் பின்னர் மனித உரிமைகள், காணமல் போணவர்கள், அரசியல் கைதிகள், காணி ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் அத்தனையையும் எம்மீது தாங்கிக்கொண்டு நகர்த்தி வந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் நான். பிரஜைகள் குழுவானது 8 மாவட்டங்களிலும் பெறுமதி வாய்ந்த ஒரு குழுவாக தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற இந்த சமயத்தில் கடந்த 05.03.2016 அன்று ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய எமது நிர்வாக உறுப்பினர்கள் முற்பட்டனர்.

அன்றைய கூட்டத்தினை நிர்வாகக் குழுக் கூட்டமாகக் கூட வேண்டும். அந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு அமைய நாங்கள் பொதுச் சபையைக்கூட்டி புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என நான் தெரியப்படுத்தியும். எனது அனுமதியின்றி எனது ஒப்புதல் பெறாமல் அந்த கூட்டத்தினை நடத்த முற்பட்டனர். ஆனால் அந்த கூட்டம் இடை நிறுத்தப்பட்டுவிட்டது.

உங்களிடம் இருக்கும் நிதிப் பிரச்சனைதான் இந்த பிரஜைகள் குழுவின் பிளவுக்கு காரணமா என ஊடகவியளாளர் கேள்வி தொடுத்த போது,

இது வரையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்தவிதமான நிதியும் கிடைக்கவில்லை. எந்த நிதியையும் வைத்து பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.