ரயில்களின் புதிய கால அட்டவணையால் பயணிகளுக்கு சிக்கல்!!

1143

Fort

புகையிரதங்களின் புதிய நேர அட்டவணையால் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ரயில் பயணிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நேர அட்டவணையால் எந்த ஒரு புகையிரதமும் கொழும்புக்கோ அல்லது மருதானைக்கோ குறித்த நேரத்திற்கு வருவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

முக்கியமாக பிரதான ரயில் மார்க்கங்களிலேயே இவ்வாறு புகையிரதங்கள் காலதாமதமாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில சமயங்களில் 10 தொடக்கம் 15 நிமிடங்களுக்கு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதன்காரணமாக சரியான நேரங்களுக்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுவதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், முன்பு அலுவலக ரயில்கள் நிறுத்தாத ரயில் நிலையங்களில் தற்போதைய கால அட்டவணையின் பிரகாரம் ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும் இதன் காரணமாகவும் தாம் காலதாமதமாக அலுவலகங்களுக்கு செல்வதாக பயணிகள் தெரிவித்திருப்பதாக சுடிக்காட்டியுள்ளனர்.