
ஆட்கடத்தலை தடுக்க இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஆட்கடத்தல் குறித்து ஆராயும் அவுஸ்திரேலியாவின் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.





