பொலிஸாரின் ஆணையை மீறிச் சென்ற ஆட்டோ மீது துப்பாக்கிச் சூடு!!

464

1 (58)

தொடங்கொட – போம்புவல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட முயற்சித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் உத்தரவை கவனிக்காத குறித்த வாகனம் தொடர்ந்தும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் அந்த முச்சக்கர வண்டியை துரத்திச் சென்று அதனை நிறுத்துமாறு சமிஞ்சை செய்த போதும் அவர்கள் நிறுத்தாது பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.இதன்படி பொலிஸாரால் குறித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் இருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போம்புவல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவத்தில் கடமை புரிபவர் எனவும் மற்றொருவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.