மின்சாரத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக நுகர்வோருக்கு உள்ள உரிமைகள், கடமைகள் தொடர்பில் வடமாகாண நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்று(05.04.2016) வவுனியாவில் இடம்பெற்றது.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப்பிரிவின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வை.எல்.பாறூக் அவர்களின் வழிநடத்தலில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இச் செயலமர்வு நடைபெற்றது.
வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்குரிய 34 நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மின்சாரத்தை நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் ஊடாக கிராம அலுவலருக்கும், அவர்களின் ஊடாக கிராம மட்டத்திற்கும் கொண்டு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச் செயலமர்வு இடம்பெற்றது.






