
உலக சுகாதார தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7(இன்று) ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் இந்த சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.இந்த வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
மேலும், இலங்கை மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால தெரிவித்துள்ளார். சென்ற வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக உணவுப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





