வவுனியாவில் அடிக்கடி செயலிழக்கும் வங்கியின் ஏ.ரீ.எம் இயந்திரம் : முகாமையாளர் மறுப்பு!!

892

ATM

வவுனியா மக்கள் வங்கியின் ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயல்இழப்பதால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என பிரபல்யமான தமிழ் இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு வவுனியா வங்கியின் முகாமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கி முகாமையாளர்,
வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக காணப்படும் ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து காணப்படுகின்றது என இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றையதினம் மக்கள் வங்கியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக 11 மணியிலிருந்து 2 மணிவரையில் அகில இலங்கை ரீதியாக ஏ.ரீ.எம் இயந்திரங்கள் இயங்கவில்லை. அதன்பொது வாடிக்கையாளர்களின் நலன்கருதி 6 கவுண்டர்களின் சேவை வழங்கினோம்.

இவர்கள் தெரிவித்தது போல எமது ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து காணப்படுவது இல்லை. திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 8.00 மணி தொடக்கம் 6.00 மணிவரையில் எமது வாடிக்கையாளர் சேவை காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.