வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தினமும் கழிவுகள் நகரசபை ஊழியர்களால் சேர்க்கப்பட்டு நகரசபை வாகனங்களில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுகின்றன.
இக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய முறையில் மூடப்படுவதில்லை என்றும் அதனால் வாகனங்களில் உள்ள குப்பைகளும் கழிவுகளும் காற்றில் பறந்து வீதிகளிலும் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் தங்கிவிடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக் குப்பைகள் காற்றில் பறப்பதால் நகரசபை வாகனங்களுக்குப் பின்னால் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இதனை உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.