தமிழ் சிங்கள புதுவருட மலர்வு விழாவினை முன்னிட்டு வவுனியா கல்வி வலயங்களான வடக்கு-தெற்கு இணைந்து ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்வுகள் நேற்று(07.04.2016) காலை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், சர்வமதக் குருக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வவுனியா மாவட்டத்தில் தமிழ் சிங்கள மக்களின் இன நல்லுறவை சித்தரிக்கும் கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகள், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தேசிய கீதமானது தமிழ் மாணவர்கள் சிங்களத்திலும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியிலும் பாடியமை ஒரு விசேட அம்சமாகும்.






