
வவுனியாவில் இருந்து இன்று மாலை காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட புகையிரதமானது 6.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது 6.40 மணியளவில் வவுனியாவில் இருந்து புறப்பட்ட புகையிரதமானது மன்னர் வீதிக் கடவையை
அண்மித்த போது அப் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்துடன் இணைந்திருங்கள்.





