வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)2ம் இணைப்பு!!

694

 
இன்று (08.04.2016) காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பஸ்தரான முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் வசித்துவந்த எஸ். பீற்றர் என்ற 56 வயதுடைய குடும்பஸ்தரே ரயிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் சென்ற போது குறித்த நபர் ரயிலிருந்து விழுந்துள்ளதாகவும் இறந்தவரின் உடலை ரயில் சாரதி வவுனியா புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மறுடியும் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இறந்தவரை அடையாளம் காட்டிய உறவினரிடமிருந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? போன்ற கோணத்திலும் விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

12987996_1558624864467951_641019322_nDSC02965DSC0296612939691_468321790027808_804719509_n 12969393_468321716694482_1144947345_n 12969394_468321770027810_379098763_n 12980590_468321780027809_1730002971_n