
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 647 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் , ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200 இற்கும் அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சபைத்தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 610 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.





