துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!!

542

shooting

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் சாரதி மீதே இனந்தெரியாத சிலரால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் எம்பிலிபிடிய – மோதரவான பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.