வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : மூவர் கைது!!

257

Pro1

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்திருப்பதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22,24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தப் பெண்கள் சிலாபம், அக்மீமன மற்றும் பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் இரண்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.