விரைவில் இலங்கையில் மின்சார ரயில்!!

635

Train

மின்சாரத்தின் உதவியால் பயணிக்கக் கூடிய ரயில் சேவையை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாணந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.