பிரான்ஸ் இயற்றிய புதிய சட்டத்தால் சிக்கலில் பாலியல் தொழிலாளிகள்!!

261

Pro

பிரான்ஸ் நாடு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதால், அந்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகள் சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன் கிழமை அன்று பிரான்ஸ் அரசு ஒரு அதிரடி சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

அதாவது, பணம் கொடுத்து பாலியல் தொழிலாளியிடம் செல்பவர்களுக்கு முதல் முறையாக 1,500 யூரோ அபராதமும், இதையே தொடர்ந்து செய்தால் 3,750 யூரோ அபாரதமும் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த அதிரடி சட்டத்தின் விளைவாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சுமார் 37,000 பாலியல் தொழிலாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, தங்களது வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள அண்டை நாடான சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு அரசாங்கமே சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது. மேலும், பாலியல் தொழில் எவ்வித ஆபத்துமின்றி நடக்க சாலை ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட அறைகளும் அமைத்துள்ளது.

எனவே, பாலியல் தொழிலாளிகளுக்கு சிக்கல் இல்லாத சுவிஸ்லாந்து நாட்டில் நுழைவதற்கு பிரான்ஸ் பாலியல் தொழிலாளிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் Aspasie என்ற அமைப்பு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், ‘பிரான்ஸ் நாட்டின் புதிய சட்டத்தால் சுவிஸ் நாட்டிற்குள் அதிக பாலியல் தொழிலாளிகள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் நுழைந்தால், இங்குள்ள பாலியல் தொழிலாளிகளின் வருமானம் குறைந்துவிடும்’ என அச்சம் தெரிவித்துள்ளது.