வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று (10.04.2016) காலை நடைபெற்றது.
இன் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அதிதியாக கலந்து கொண்டு நிதியுதவியினை றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் க.பார்த்தீபனிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன், மற்றும் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான ராஜசேகர், பிரசாத், குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புது வருட நிகழ்வுகளில் 13.04.2016 அன்று துவிச்சக்கர ஓட்ட நிகழ்வும், மரதனும் நடைபெறும். அத்துடன் 14.04.2016 அன்று மைதான நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.