”பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நூல் வெளியீட்டு விழா!

383

 
மலையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (10.04.2016) ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் நடைபெற்றது.

மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி.இராஜேஸ்வரி மகேஸ்வரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலையக கலை, பண்பாட்டு, மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறண்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேஸ்வரனும், நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்தினர்.

நூலின் ஆய்வுரையை சூரியகாந்தி பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும் கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தியமை குறிப்பிடதக்கது.

IMG_0044 IMG_0064 IMG_0075 IMG_0087 IMG_0091 IMG_0129 IMG_0146 IMG_0172 IMG_0184 IMG_0199 IMG_0214 IMG_0249