சமூக வலைத்தளங்களில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பதிவேற்றுபவர்களுக்கு தி.மு.க.வினர் 200 ரூபா வழங்குவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களின் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
கடந்த காலங்களை போல் ஊர் ஊராக, வீதி வீதியாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களின் மூலமும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்சியின் நன்மைகளையும், எதிர்க்கட்சியின் தீமைகளையும் விளக்கி அரசியல் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் தங்களுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.