புது வருடத்தில் கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு!!

260

jail

பிறக்கவிருக்கும் ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உண்ண வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம் மாதம் 13ம், 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரையான காலப் பகுதியில் உறவினர்களுக்கு உணவை எடுத்து வந்து கைதிகளுக்கு வழங்க முடியும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ்வாறு கொண்டுவரப்படும் உணவுகளை அதிக சோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.