நேற்று காலை 10.00 மணியளவில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதீயுதின் அவர்களினால் ஹிஜ்ராபுரம், 4ம் கட்டையில் Asian Gypsum Moulding (Small Industry Pvt Ltd) நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதீயுதின் மற்றும் விருந்தினர்களாக காதர் மஸ்தான் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், க.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா), பாவா பயூன் (பிரதேச செயலாளர், செட்டிக்குளம்), எஸ்.பாஸ்கரன்( எச்.என்.பி வங்கி முகாமையாளர்) , சுகந்தி கிஷோர் (வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செயலாளர்), மற்றும் பல அரசமற்றும் அரசார்பற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.