நேற்று(10.04.2016) வவுனியாவில் சதொச மொத்த வியாபார நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களினால் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சில வியாபார நிலையங்களில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் தயவு செய்து விலைகளை உரிய விலைகளுக்கு மேல் அதிகரிக்காதிர்கள். அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அவ் வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.