இராணுவ வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி!!

477

accident-logo1-620x330

திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று (11) இரவு வேளையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தது தப்பிச் சென்ற இராணுவ வாகனத்தையும் சாரதியையும் பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 59வயது நடராசா வாசுகி, 33 வயது நடராசா சிவதாரணி ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன், சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி அருள்ராஜ் மற்றுமொரு பயணி ராஜேஸ்வரி ஆகியோர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொரிஸார் தெரிவித்துள்ளனர்.