யாழ்ப்பாணம் – இருபாலையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (11.04.2016) திங்கட்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது.
நேற்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.