புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி : வவுனியாவில் இளைஞர் கைது!!

1075

arrests

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், இராணுவ சிவில் நிர்வாகத்தின் முல்லைத்தீவுப் படையணியில் பணிபுரிந்துவந்தவர் என்றும் குறிப்பிட்டனர்.