வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை கொடிதம்ப பூசையை தொடர்ந்து எட்டரை மணியளவில் வசந்தமண்டபபூஜை நிறைவு பெற்று சித்தி விக்னேஸ்வரன்பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான காலை 9.15 மணியளவில் அடியவர்கள் வடம்பிடிக்க அரகரோகரா முழக்கத்துடன் எம்பெருமானது தேர் இழுக்கபட்டு பக்தர்கள் புடைசூழ திருவீதி வலம்வந்து 10.15 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்…