வவுனியாவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!!

957

Kulam

புத்தாண்டு தினமான இன்று வவுனியாவில் ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள கனகராயன்குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஏழு வயது நிரம்பிய நிதுசன் என்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளான்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்