
பண்டிகைக்காலப் பகுதியில் நீர் பாவனை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உயர்வான பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பின் அளவை தற்போது 1.8 மில்லியன் மீற்றர் கனவளவாக உயர்த்தியுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி பாவனையாளர்களுக்கு நீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சகல நீர்த்தேக்கங்களினதும் நீரை விநியோகிக்கும் பம்பிகள் முழுஅளவில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உயர்வான பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு பவுசர்கள் மூலமாக போதுமானளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.




