இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் பல மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவி வருகின்றது.
வவுனியாவிலும் கடும் வெப்பம் மக்களை வாட்டிவந்த நிலையில், வவுனியாவில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இத் தீடீர் மழையினால் வெப்பம் தணிந்ததுடன், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






