
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (16.04.2016) தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவகுமார் (68 வயது) என்பவரே தனது வீட்டில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவி யாழ்ப்பாணத்தில் வசித்துவருவதாவும் இவர் தனிமையில் வீட்டில் வசித்து வந்ததாகவும் கிராம சேவையாளர் தெரிவித்தார்.
-சம்பவ இடத்திலிருந்து எமது விசேட நிருபர்-
உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு இணைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.





