90 பயணிகளுடன் அதிர்ஷ்டவசமாக தப்பிய விமானம்!!

512

Fli

பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிக்கொண்டது.

இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.