வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கலந்துரையாடல்!!

262

 
வவுனியா கலாச்சார மண்டத்தில் நேற்று (16.04.2016) காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இன் நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்ஸிம் சகோதர, சகோதரிகளுக்காக அர்ப்பணம் செய்யும் முகமாக விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வட கிழக்கிலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், இணக்க சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக் கலந்துரையாடலில் புதிய ஆட்சி மாற்றத்ததுடன் மாற்றத்திற்கான நிலைமாறு நீதிக்கான அரசின் செயற்பாடுகள், இணைப்பாளர் நீதிகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சினுடைய கலந்துரையாடல் சுருக்கம், நிலைமாறு நீதிக்கான அறிமுகம், தேசிய கலந்துரையாடலுக்கான சிறுகுறிப்பு ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.

P1200290 P1200291 P1200292 P1200293 P1200294 P1200295 P1200296 P1200297 P1200298