யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் 5 ஆம் திருவிழா பூந்தண்டிகை உற்சவம் நேற்று (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் மின்னொளியில் அசைந்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
ஏராளமான அடியவர்கள் குறித்த நிகழ்வில் பங்கு பற்றி விநாயகப் பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.